கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் நூலக அறிவியல் துறையின் சார்பாக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் அளவுகோல் அடிப்படையில் இணையதள வளங்கள் மற்றும் அய்வுக்கருவிகள் குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை நேற்று (04.03.2017 ) காலை 10 மணிஅளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் துவங்கியது. பின்னர் நூலகத்துறையின் தலைமை நூலகர் முனைவர்.சிராஜ்நிஸா வரவேற்புரை வழங்கினார். அதைத்தொடர்ந்து முதல்வர் முனைவர். சுமையா துவக்கவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நூலகத்துறைத் தலைவர் முனைவர் இரா.சேவுகன் மற்றும் பாரதிதாசன்பல்கலைக்கழகத்தின் நூலகத்துறைத்தலைவர் முனைவர் எஸ். சீனிவாசக ராகவன் ஆகியோர் அவைத் தலைவர்களாக இருந்து மாணவிகள் வழங்கிய ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பீடு செய்ததுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவுத் கான், துணை முதல்வர் முனைவர். நாதிராபானு கமால் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக நூலகத்துறை உதவிப் பேராசிரியர் பி. சுமதி நன்றியுரை வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









