தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 22.01.2019 அன்று கணிப்பொறியில்துறை சார்பாக கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணியளவில் இறை வணக்கத்துடன் துவங்கியது. ஆறு கல்லூரிகளிலிருந்து 80 மாணவிகள் பங்கேற்றனர்.
அதில் இளங்கலை சார்பாக கீழக்கரை முகமது சகத் பொறியியல் கல்லூரி மாணவிகளும், முதுகலை சார்பாக சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவிகளும் சுழற்கோப்பையை வென்றனர். தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் இரகு ஆண்டனி அவர்கள் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மாலை 3.30 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









