மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு..

மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு..

சில மதுபான சில்லறை விற்பனை கடைகளி​லிருந்து குறுஞ்​செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்​களுக்​கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்​பட்ட விற்பனை புள்ளி விவரங்​களுக்​கும் இடையே அதிக அளவில் விற்பனை வித்​தி​யாசங்​கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.

வாடிக்கை​யாளர்​கள் விரும்பி கேட்​கும் மதுபானங்​களு​டன் அதற்​குண்டான ரசீது கண்டிப்பாக வழங்க வேண்​டும். மதுபானங்களை விற்பனை செய்​யும்​போது மட்டுமே பாட்டில்களை ஸ்கேன் செய்ய வேண்​டும். மதுபானங்களை முன்​கூட்​டியே ஸ்கேன் செய்து வாடிக்கை​யாளர்​களுக்கு விற்பனை செய்​யக்​கூடாது.

விற்​பனைக்​கும், இருப்​புக்​கும் வித்​தி​யாசம் ஏற்படு​கிறது. தவறான செயல்​பாடுகளை கண்காணிக்க தவறும் பட்சத்​தில் சம்பந்​தப்​பட்ட மாவட்ட மேலா​ளர் மற்றும் உதவி மேலா​ளர் ஆகியோரே இதற்கு முழு பொறுப்​பாவார்​கள். அவர்​களிடம் துறைரீ​தியான உரிய ​விசாரணை மேற்​கொண்டு நட​வடிக்கை எடுக்​கப்​படும்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!