டாஸ்மார்க் அகற்ற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AIYF )தஞ்சாவூர் மாநகர குழு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு ..

தஞ்சாவூர் மாநகராட்சி கீழவாசலில் இயங்கி வரும் டாஸ்மாக் (கடை எண் 7901 ) கடையினால் பெண்களும் ,பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வணிக பெருமக்களும் போக்குவரத்து நெரிசலினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 11-09-2024 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் 11-09-2024 மதியம் 1 -00 மணியளவில் போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேசி

30-11-2024 க்குள் இடமாற்றம் செய்து விடுவதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அவர்கள் கையெழுத்திட்டு உத்திரவாதம் அளித்து எழுதி கொடுத்து உள்ளார்கள்.

ஆனால் (06-01-2025) வரை கடை மாற்றம் செய்வதற்கான எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை .மாவட்ட ஆட்சியர்  தலையிட்டுடாஸ்மாக் மது கடையை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஆர். பி. முத்துக்குமரன் . மாநகரக்குழு உறுப்பினர் ஆ.தன்ராஜ் , அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட பொருளாளர் உ.காதர்உசேன் , மாநகர செயலாளர் ஜெ.உமர் என்கிற காதர் உசேன் ஆகியோர் மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

செய்தி. . ஏ.கே.சுந்தர், தஞ்சாவூர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!