டங்ஸ்டன் விவகாரம் தமிழக அரசின் நிலைப்பாடு மிகச் சரியானது!-ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் வரவேற்பு..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு முக்கிய தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய மோடி அரசு அனுமதி அளித்துள்ளது
இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாடு மிகச் சரியானது வரவேற்கத்தக்கது.
மத்திய ஒன்றிய அரசு தமிழ்நாடு மாநில அரசை கலந்து பேசாமல்
டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரான இந்தத் திட்டத்திற்கு எதிராக சட்டபேரவையில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மிகச்சரியானது.
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் சிங்க் நிறுவனம் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தனியார்க்கு தாரைவார்க்கப்பட்டது.
இந்த வேதாந்தா குழுமம் தூத்துக்குடியில் நடத்திய ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் பெருமளவில் போராடினார்கள்.
இதனால் அதிமுக ஆட்சியில் அப்பொழுது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 14 பேர் பலியானார்கள் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
நாட்டின் கனிம வளங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று சட்டங்கள் ஏற்கனவே இருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மோடி அரசு அந்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்தது இதன் மூலம் எவ்வளவு அரிதான கனிமமாக இருந்தாலும் அதை கார்ப்பரேட்டுகளுக்கு குத்தகை விட முடியும் என்ற சட்டத்திருத்தம் செய்தது.
தற்பொழுது மோடி அரசு டங்ஸ்டன்,கோபால்ட், லித்தியம் போன்ற முக்கிய முக்கியமான கனிம பொருட்கள் இந்த நாட்டின் பொது சொத்தாக இனிமேல் இருக்காது அது கார்ப்பரேட்டுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அது தாரை வார்க்கப்படும்.
வேதாந்தாவின் உரிமையாளர் அணில் அகர்வால் இவர் இன்னொரு அதானி ஆவார் இவருக்கும் மோடிக்கும் இருக்கும் நெருக்கத்தின் காரணமாகத்தான் இந்த டங்ஸ்டன் குத்தகை உரிமை அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் கனிம வளம், எல்லாம் கார்ப்பரேட்டுகள் சுரண்டுவதற்கும் கொள்ளை லாபம் ஈட்டுகிற வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றுவதற்கான ஏற்பாட்டை இந்த பிஜேபி அரசு செய்து கொண்டிருக்கிறது.
மோடி அரசினுடைய செயல்பாடுகள் அனைத்துமே ஜனநாயகத்திற்கு எதிரானது.
இவர்களுடைய ஆட்சியின் போக்கு நமது அரசமைப்பு சட்டத்தினுடைய குணாம்சம் அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கின்ற நிறுவனங்களுக்கிடையே பங்கு பத்திரம் அதன் குனாம்சம் இவற்றையெல்லாம் மாற்றுவதற்கான தொடர்ச்சியாகவே பாஜக ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறார்கள் என்பது இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் பெரும் ஆபத்தானதாக அமையும் என்பதை உணர்ந்து தமிழக மக்களுக்காக தமிழக அரசும் இந்த டங்ஸ்டன் சுரங்கம் மதுரை அருகில் அமைவதை இறுதிவரை போராடி தடுத்து நிறுத்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
You must be logged in to post a comment.