சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு வட கடலோரப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தமிழகத்தின் தெற்குப் பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், ஆகிய இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

You must be logged in to post a comment.