தென்காசி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி; தமிழகத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்; தமிழக அரசு உத்தரவு..

தென்காசி மாவட்ட புதிய எஸ்.பியாக சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. அதன் படி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் தொடர்பான கண்காணிப்பு பிரிவு தலைமை இயக்குனர் சக்தி கணேசன், சென்னை புலனாய்வு பிரிவு-1 துணை காவல் ஆணையராகவும், மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி. சுஜித் குமார், சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும், வண்டலூர் ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமி துணை இயக்குனர் செல்வநாகரத்தினம், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராகவும், மத்திய குற்றப்பிரிவு-2 துணை ஆணையர் என்.எஸ். நிஷா, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், ராமநாதபுரம் கடலோர காவல் படை கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத், சென்னை மயிலாப்பூர் துணை காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி காவல் காணிப்பாளராகவும், திருவண்ணாமலை காவல் காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை கண்காணிப்பாளராகவும், திருநெல்வேலி நகர கிழக்கு துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா, பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை தீவிரவாத எதிர்ப்பு படை காவல் கண்காணிப்பாளர் பாக்ய சினேகா பிரியா, சென்னை அண்ணாநகர் துணை ஆணையராகவும், சென்னை பூக்கடை துணை ஆணையர் ஷ்ரேயா குப்தா, திருப்பத்தூர் கண்காணிப்பாளராகவும், சென்னை தாம்பரம் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் கவுதம் கோயல், சேலம் காவல் கண்காணிப்பாளராகவும், சேலம் காவல் கண்காணிப்பாளர் ஏ.கே. அருண் கபிலன் நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளராகவும், விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ப. சுந்தரவடிவேல், சென்னை பூக்கடை பகுதி துணை ஆணையராகவும், சென்னை காவல்துறை நவீன மயமாக்கல் பிரிவு உதவி ஆய்வாளர் கண்ணன், விருதுநகர் காவல் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.சுப்புலட்சுமி, சென்னை கோயம்பேடு துணை காவல் ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு-1 துணை ஆணையர் ஸ்டாலின், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளராகவும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை துணை காவல் ஆணையர் மகேஸ்வரன், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையர் சீனிவாசன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், சேலம் மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் மதிவாணன், வேலூர் காவல் கண்காணிப்பாளராகவும், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (TCMPF) விஜிலென்ஸ் அதிகாரி மெகலினா ஐடன், சென்னை தலைமையக துணை ஆணையராகவும், சென்னை சைபர் கிரைம் துணை ஆணையர் கீதாஞ்சலி, சென்னை மத்திய குற்றப்பிரிவு-2 துணை ஆணையராகவும், சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ரமேஷ்பாபு, சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராகவும் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!