மாநில நீச்சல் போட்டிக்கு மாணவ மாணவிகள் தேர்வு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கா. பெருமாள் பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு தேர்வு பெற்றனர். மதுரை வருவாய் மாவட்ட அளவில் நீச்சல்  போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் நடைபெற்றது    அதில்  உசிலம்பட்டி அருகே உள்ள க. பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி  மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்  . நீச்சல் போட்டியில்தனிநபர் போட்டி   மற்றும் ப்ரீ ஸ்டைல் ரிலே மிட்லே  ரிலே  மொத்தம்       முதல் இடம்-34        இரண்டாம் இடம்  32  மூன்றாம் இடம் 24   மாணவிகள் பெற்ற மொத்த வெற்றி புள்ளிகள் 92              மாணவர்கள் பெற்ற மொத்த புள்ளிகள் 62             வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வடக்கம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தாம்ராஜ் சான்றிதழ்கள் வழங்கினார்.  கா பெருமாள் பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சோ.சா. சரவணகுமார் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் உள்ளனர்.  மேலும்  திருநெல்வேலியில் மாநில அளவில் நடைபெறும்   நீச்சல் போட்டிகளில் 8  மாணவர்கள் 10 மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

உசிலை மோகன்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!