கீழக்கரை மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வால்போஸ்டர் – ‘ஈருலக வெற்றியை நோக்கி விரைவில்…’

கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் ஒட்டப்பட்டு இருக்கும் வால்போஸ்டர் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘ஈருலக வெற்றியை நோக்கி விரைவில்…’ என்கிற வாசகம் மட்டும் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டு இருக்கும் இந்த வால்போஸ்டர் எந்த அமைப்பினரால் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை.

என்ன நோக்கத்திற்காக ஒட்டப்பட்டுள்ளது..? என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த வால்போஸ்டரின் நோக்கம் சகோதரத்துவம், அமைதி, சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, உள்ளிட்ட கருப்பொருள்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!