தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 18.01.2025 அன்று சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு தாங்கள் வசிக்கும் பகுதிக்கு திரும்பி செல்ல வசதியாக சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு நவீன (பக்கெட் சீட்) அரசு போக்குவரத்து கழக பேருந்து 18.01.2025 சனிக் கிழமை மற்றும் 19.01.2025 ஞாயிற்றுக் கிழமை (அரசு கட்டணத்தில்) சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்துகள் சுரண்டையில் இருந்து சென்னைக்கு மாலை 5.00 மணி, மாலை 5-30 மணிக்கும், சுரண்டையில் இருந்து கோவைக்கு இரவு 7-30, 8-15 மணிக்கும் சுரண்டையில் இருந்து திருப்பூருக்கு இரவு 7.00, 8.00 மணிக்கும் இயக்கப் படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு சுரண்டை பஸ் நிலையத்தை 6383939571, 9629211549 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.