கீழக்கரையில் தொடங்கிய கோடை கால நீர் பந்தல்..

தமிழகத்தில் இப்பொழுதே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது.  வெயிலின் தாக்கத்தை குறைக்க பல் வேறு அமைப்புகள் நீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் பல் வேறு குடிநீர் பானங்கள் வழங்குவார்கள்.

இதன் தொடக்கமாக பல ஆண்டுகளாக நீர் பந்தல்  அமைத்து பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் தமீனா ஸ்டீல்ஸ் என்ற தனியார் நிறுவனம் வெள்ளிக்கிழமை தோறும் பொதுமக்களுக்கு தாகத்திற்கான பானம் வழங்கும் சேவையை இன்று (22/03/2019) முதல்  தொடங்கினர்.  இச்சேவையை இந்நிறுவனத்தின் உரிமையாளர் முகம்மது ஷகீல் தொடங்கி வைத்தார்.

இவர்களின் சேவையை பாராட்டி கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!