சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை காடுபட்டி போலீஸார் விசாரணை..

மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கோவில்குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சுந்தரபாண்டியன் வயது 25.இவர் சோழவந்தான் பகுதியில் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார் இவர் தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரை வற்புறுத்தியதாகவும் அதற்கு சிறிது காலம் செல்லட்டும் என பெற்றோர்கள் கூறியதாகவும் இதனால் விரத்தி அடைந்த சுந்தர பாண்டியன் நேற்று  இரவு கோவில் குருவித்துறையில்  தோட்டத்தில் உள்ளமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுந்தரபாண்டியன் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுகாக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து காடுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!