குழந்தை இல்லா ஏக்கம்..முதியவர் தற்கொலை..

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் ராசு 55. இவர் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரியகீரமங்கலத்தில் மனைவி லதாவுடன் வசித்து வந்தார்.  இவருக்கு  திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லா ஏக்கத்தில் ராசு காணப்பட்டார்.

இதனால் மனமுடைந்த அவர் வீடு அருகேயுள்ள காட்டு கருவேல் புதருக்குள் சென்று எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார். லதா புகாரில் திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!