தனுஷ்கோடியில் மீனவர் தற்கொலை..

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே சேராங்கோட்டயைச் சேர்ந்தவர் முத்துவேல், 22. இவரது மனைவி நதியா, 20. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று (12.5.19) இரவு இருவருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த முத்து வேல், இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துறைமுகம் போலீசார், முத்துவேல் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு இராமேஸ்வரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!