இராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை ..

இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை போலையன் நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி . இவரது மகள் ஜோதிகா, 19. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு (ஆங்கில இலக்கியம்) படித்து வந்தார்.

இந்நிலையில் அவரது பெற்றோர் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றார். இதனையடுத்து வீட்டில் தனிமையில் இருந்த ஜோதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வயிற்று வலியால் அடிக்கடி அவதியடைந்தை வந்த ஜோதிகா, அதன் விரக்தியில் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இத்தகவலின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் அவரது உடலை கைப்பற்றி இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!