பாரதி நகர் கிராமத்தில் மாணவ மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாரதி நகர் கிராமத்தில் தமிழ்நாடு கிராமப்புற  இயக்கத்தின் கீழ் அரசமைப்பு உரிமைக் கல்வி (CRE) மூலம் வான்முகில் தன்னார்வலர் இயக்கம் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கு  அரசியல் அமைப்பு , கிராம சபைகள் , அரசின் சட்ட திட்டங்கள் உட்பட இளம் வயதிலேயே ஜாதி மத பாகுபாடு இன்றி விளையாட்டு மூலமாகவும் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவும் இலகுவாக கற்றுக் கொடுக்கின்றனர் இதனை அறிந்து கொள்ளும் வகையில்  மதுரை வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு இளங்கலை மாணவிகள் வீ.தாமரைச்செல்வி, பா. சிந்து பிரியா , அ.சுகந்தி, ரா.சுமதி, மூ .சூரியலட்சுமி,  கி.சுவாதி, க.தமிழ்ச்செல்வி , ஈ .வைஷ்ணவி ஆகியோர் அவர்களோடு இணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினர். 

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!