இருக்கிற விளக்கு எரியவில்லை.. புதிய விளக்கு கம்பம் பணி தொடங்கியது.. நகராட்சிக்கு போராட்டங்களும் செவிடன் காதில் சங்கு..

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் அடிப்படை வெளிச்சத்துக்கு வேண்டி போராடும் நிலை.  அதே போல் பொறுத்தப்பட்ட 9 இடங்களுக்கு மேலாக எரியாமலே கிடக்கிறது.  அதே போல் ஒரு ஹைமாஸ் விளக்கு கடற்கரையில் கேட்பாரற்று குப்பையோடு கருப்பையாக கிடக்கிறது.

கடந்த வாரம் தெரு விளக்குகளை சரி செய்ய கோரி அனைத்து கட்சிகளும் மெழுகுவர்த்திகள் ஏந்தி போராட்டமும் நடத்தின.  ஆனால் அனைத்தும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் எதையும் கண்டு கொள்ளாமல், வள்ளல் சீதக்காதி சாலையில் புதிய விளக்கு அமைக்கப்படுகிறது.. இந்த அவசர கோலம் யாரை திருப்திப்படுத்த??

——————————————————————-

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!