ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் உடல் ஊனமுற்றோர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி அம்மா உணவகத்தில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைக்கும் அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவுகள் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா துவக்கி வைத்தார்.அதன் பிறகு 400 க்கும் மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்களுக்கு , 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், மற்றும் 500 ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!