திருச்சி கோட்டத்துக்குட் பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற் கொள்ளப்படுவதால், ரயில் போக்குவரத்தில் பகுதியளவில் ரத்து உள்ளிட்ட மாற்றங்கள்!

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ரயில் போக்குவரத்தில் பகுதியளவில் ரத்து உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளன. இதன் காரணமாக பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம், ரயில் புறப்படும் நேரம் மாற்றம் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளன.

தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் -விழுப்புரம் பயணிகள் (வ.எண் 66045), ஏப்ரல் 9,16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி – விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விக்கிரவாண்டியுடன் நிறுத்தப்படும்.

இதுபோல சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் -புதுச்சேரி பயணிகள் ரயில் (வ.எண்.66051) ஏப்ரல் 9,16 ஆகிய தேதிகளில் விழுப்புரம் -புதுச்சேரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் -சென்னைகடற்கரைப்பயணிகள் ரயில் (வ.எண்.66046) விழுப்புரம் -விக்கிரவாண்டி இடையே ஏப்ரல் 9,16 ஆகிய தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -மயிலாடுதுறை பயணிகள் ரயில்(வ.எண்.66019), ஏப்ரல் 9, 16 ஆகிய தேதிகளில் விழுப்புரம் -சேர்ந்தனூர் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் சேர்ந்தனூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.48 மணிக்குப் புறப்படும்.

ஏப்ரல்9,16 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி -திருப்பதி விரைவு ரயில் (வ.எண் 16112) புதுச்சேரி -முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்திலிருந்து பிற்பகல் 3.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20 மணிக்குப் புறப்படும்சென்னை எழும்பூர் -குருவாயூர் விரைவு ரயில் (வ.எண்.16127) ஏப்ரல் 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக முற்பகல் 11.50 மணிக்குப் புறப்படும். மேலும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 90 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.

புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து ஏப்ரல் 9,16 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி -ஹவுராஅதிவிரைவு ரயில்(வ.எண்.12868) சுமார் 50 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல3.05 மணிக்குப் புறப்படும். மேலும் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 10 நிமிஷங்கள் நிறுத்தி இயக்கப்படும்.

ஏப்ரல் 9, 16 ஆகிய தேதிகளில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11 மணிக்குப் புறப்படும் திருச்சி -சென்னை எழும்பூர் சோழன் விரைவு ரயில் (வ.எண்.22676), ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 12 மணிக்குப் புறப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!