சோழவந்தான் எம். வி.எம். பள்ளியில் ஸ்ரீ கலைவாணி அம்மன் பிரதிஷ்டை;
பெற்றோர்கள் மாணவ மாணவிகள் வரவேற்பு..
சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கருங்கற்களால் ஆன ஸ்ரீ கலைவாணி அம்மன் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது கல்விக் கடவுளான கலைவாணியின் சிலை கருங் கற்களால் உருவாக்கப்பட்டு தனியார் பள்ளியில் நிறுவப்பட்டது பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ளது எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இப்பள்ளியின் தாளாளராக உள்ள எம் வி எம் மருதுபாண்டியன் அவர்கள் சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவராகவும் இருந்து வருகிறார் மேலும் இவர் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து வருவதுடன் பல்வேறு ஆன்மீக செயல்களுக்கும் பல்வேறு கோவில்களில் நடைபெறும் குடமுழுக்கு விழாக்களுக்கும் தங்கள் குடும்பத்தின் சார்பாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் இந்த நிலையில் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள தங்களது பள்ளியில்புதிதாக உருவாக்கப்பட்ட கருங்கற்களால் ஆன ஸ்ரீ கலைவாணி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது இதற்கான முழு ஏற்பாடுகளையும் எம்விஎம் குடும்பத்தின் சார்பாக செய்யப்பட்டிருந்தது
இதில் வேதாமக ரத்தினம் வரதராஜ பாண்டிட்ஜி சிவ ஸ்ரீ ரிஷிகேசவ சிவம் சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணயர் வேத பாடசாலை சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக யாக வேல்விகளை நடத்தினர் கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எம் வி எம் குழுமம் தலைவர் மணி முத்தையா வள்ளி மயில் மற்றும் சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும் எம் விஎம் குழும நிர்வாகியும் எம் விஎம் கலைவாணி பள்ளியின் தாளாளருமான டாக்டர் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர் இதில் பள்ளி முதல்வர் ஆசிரியர் ஆசிரியை பெருமக்கள் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக நிகழ்வில் திரளாக கலந்து கொண்டு கலைவாணி அம்மனை வழிபட்டுச் சென்றனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது இது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கூறும் போது கல்வி கடவுள் கலைவாணியின் சிலை எங்கள் பள்ளியில் நிறுவியது எங்களுடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கல்விக்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை செய்து வரும் பள்ளியின் தாளாளர் அவர்களுக்கு மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அவரின் ஆன்மீகப் பணி மேலும் சிறப்படைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினர்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









