நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஆதரவற்ற முதியவரின் இறந்த உடலை வீரவநல்லூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர். வீரவநல்லூர் காவல்துறை உதவி ஆய்வாளர் சுப்பையா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் வீரை P. நவாஸ் ஷரீப்பை செல்போனில் தொடர்பு கொண்டு இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் P. நவாஸ் ஷரீப் தலைமையில் முதியவரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள், பொருளாளர் ஜாகிர் உசேன், துணைச் செயலாளர்கள் தக்கரை பீர் முகமது, முகமது ஹாஜி மற்றும் சித்திக், பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து நல்லடக்கம் செய்தனர். உதவி ஆய்வாளர் சுப்பையா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









