இராஜபாளையம் அருகே முகவூர் தொண்டைமான் குளத்தில் மீண்டும் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.. பொதுமக்கள் அச்சம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முகவூர் தொண்டமான் குளத்தில் அப்பகுதியில் சிலர் மீன் பிடிப்பதற்காக இரவு நேரத்தில் மீன்வலை போட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை சென்று பார்த்த பொழுது மீன் வலையில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியிருந்தது கண்டு பொதுமக்கள் வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வந்த வனத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை உயிருடன் மீட்டனர்

பின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப் போவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த தொண்டைமான் குளம் அருகே குடியிருப்பு பகுதி அமைந்துள்ளதால் 7 வது முறையாக மலைப்பாம்பு நடமாட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். வனத்துறையினர் இப்பகுதியில் மலைப்பாம்பு நடமாட்டத்தை எங்கிருந்து வருகிறது என ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!