மதுரையில் குடியிருப்பு பகுதியில் 6 அடி நல்ல பாம்பு சாரை பாம்பு பின்னி பிணைந்து நடனம் ஆடியதை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்…

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு மாடக்குளம் பகுதியில் இன்று (09/12/2020) மாலை குடியிருப்பு நிறைந்த பகுதியான இப்பகுதியில் 6 அடி நல்ல பாம்பும்,  சாரைப்பாம்பும் பின்னி பிணைந்து நடனமாடியது சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக குடியிருப்பு பகுதியில் நடனம் ஆடியதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

பின் செல்போன்களில் வீடியோ பதிவு செய்தது சமூக வலைதளங்களில் பரவியது.  குடியிருப்பு பகுதிகளில் இரு பாம்புகள் நடனமாடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!