தங்கத்தை பசையாக்கி உடலில் மறைத்து கடத்தல்..

திருச்சி விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த நாகூர், அராபத் மற்றும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த ஹக்கீம் ஆகியோர் உடலில் மறைத்து கடத்தி வந்த, ஆயிரத்து 300 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் தங்கத்துடன் பல்வேறு வேதியல் பொருட்களை கலந்து, பல்வேறு நிறங்களில் பசை போலாக்கி, மறைத்து நூதன முறையில் கடத்தி வந்துள்ளனர். சுமார் 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், மூவரிடமும் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!