இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்..

தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தனிப்பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் இதையடுத்து தனுஷ்கோடி பழைய துறைமுகப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கடற்கரை மணலில் புதைத்து வைத்திருந்த இரண்டு மூடைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் தலா 2 கிலோ வீதம் 15 பண்டல் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை தனுஷ்கோடி காவல் நிலையம் எடுத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியதால் அவர்கள் குறித்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வ தேச மதிப்பு ரூ. 20 லட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர் . கடந்த ஒரு மாத காலத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!