திருவாடானை பெரிய சிவன் கோயிலில் சப்தாவர்ணம் விழா:

ராமநாதபுரம் மாவட்டம்: திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சினேகவல்லி தாயார் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையான விழா, இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.

10 நாள் திருவிழா மற்றும் தேரோட்டம்:

கடந்த மே 31 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய 10 நாள் திருவிழா, தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான அன்று, இரண்டு தேர்கள் ஓடும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சப்தாவர்ணம் விழா:

தேரோட்டத்தைத் தொடர்ந்து, சப்தாவர்ணம் நிகழ்வு நடைபெற்றது. இந்த ஆண்டு நிகழ்வு, ஆயிரம் வைசிய மஞ்சள் பூத்தார் மகாஜனசபை சார்பில் அவர்களின் நூறாவது ஆண்டு வைர கட்டிடத்தில் கொண்டாடப்பட்டது.

மாலை நேரத்தில், பஞ்சமூர்த்திகள் மங்கள நாதஸ்வர மேளக்கச்சேரியுடன் மண்டபத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

இந்த சப்தாவர்ணம் விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!