சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து:- 11 பேர் உயிரிழப்பு..

திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் கும்மங்குடி பாலம் அருகே திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்களும், பிற வாகனங்களில் வந்தவர்களும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்தில் டிரைவர் உட்பட 8 பேர் பலியான நிலையில் படுகாயம் அடைந்த 3 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகியது. மேலும் 40 க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்து திருப்பத்தூர் மதுரை காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!