செங்கத்தில் நல்லாசிரியா் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா

திருவண்ணாமலை செப் 18; திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் ஒன்றியம், தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற தீத்தாண்டபட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெயவேல் பாராட்டு விழா நடைபெற்றது.தீத்தாண்டபட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தலைமை வகித்தாா்.பள்ளித் ஆசிரியா் மகேஸ்வரி முன்னிலை வகித்தனா். செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா் கோவிந்தராஜன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெயவேலை பாராட்டி பேசினாா். மேலும், அவருக்கு சால்வை அணிவித்து புத்தகப் பரிசு வழங்கினாா். பின்னா் விருது பெற்ற தலைமையாசிரியர் ஜெயவேல் ஏற்புரையாற்றினாா்.பள்ளி ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

செய்தியாளர், செங்கம் சரவணக்குமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!