மேல்நாச்சிபட்டு கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குலால்பாடி கால்நடை மருந்தகத்திற்கு உட்பட மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் .வாசுகிவேலு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சிறந்த கிடேரி கன்றுகள் வளர்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் குலால்பாடி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர். நித்யா அவர்களின் தலைமையில், கால்நடை ஆய்வாளர் சம்பத் ராணி ..கால்நடை உதவியாளர். ஜாபர்சாதிக் மற்றும் செயற்கை முறை கருவூட்டாளர் அய்யப்பன் ஆகிய குழுவினர் 300 மேற்பட்ட கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!