பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சிஐடியு சார்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் இறையூர் பகுதிகளில் சிஐடியு கட்சியினர் மத்திய அரசை கண்டித்து பத்து நிமிட வாகன நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெட்ரோல், டீசல் ,கேஸ் உள்ளிட்டவற்றின் மீதான விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இன்றையதினம் சிஐடியு சார்பாக வாகன நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக செங்கம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கணபதி தலைமையிலும் இறையூர் பகுதியில் தாலுகா செயலாளர் பிரகாஷ் தலைமையிலும் நடைபெற்ற 12 முதல் 12.10 மணி வரை வாகன நிறுத்த போராட்டத்தில்  மத்திய அரசை கண்டித்து சாலை  மறியலில் ஈடுபட்டனர்   இதில் கலந்துகொண்ட சிஐடியு முக்கிய நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்இந்த சாலை மறியல் காரணமாக திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்திற்கு தலைமையிலும் மத்திய அரசை கண்டித்து சாலை  மறியலில் ஈடுபட்டனர்   இதில் கலந்துகொண்ட சிஐடியு முக்கிய நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.இந்த சாலை மறியல் காரணமாக திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!