மேல்செங்கம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்;பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அந்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றதுசெங்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் உத்தரவின்பேரில் மருத்துவர் சிவசூரியன் முன்னிலையில் நடைபெற்ற மேல்செங்கம் துரிஞ்சாபுரம் கிராம பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் தாமாக முன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கிராம பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தமது குடும்பத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டார், முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வெண்ணிலா குமரவேல் வார்டு ஊராட்சி ரத்த செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள், பாஜக கட்சியின் சேகர், ஜெயராமன், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், செவிலியர்கள் பார்வதி, பச்சையம்மாள், சுகுணா, சுகாதாரத் துறையினர் அங்கன்வாடி பணியாளர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!