மேல் வன்னியனூர் கிராமத்தில் தடுப்பூசி முகாமை ஊராட்சிமன்ற தலைவர் சக்தி திருவேங்கடம் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல் வன்னியனூர் கிராமத்தில் 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சக்தி திருவேங்கடம் தலைமை தாங்கினார். கலசபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம் உத்தரவின்பேரில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது . மேல் வன்னியனூர், கீழ் வன்னியனூர் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.இந்நிகழ்வில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஜெயராமன், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி எழுத்தர் திருநாவுக்கரசு திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர் ஏழுமலை, செவிலியர் மாலினி , சுவேதா மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!