திருவண்ணாமலை மாவட்டத்தில் 421 பேருக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 74 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 20,194-ஆக உயா்ந்தது. இவா்களில் 19, 485 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.மாவட்டத்தில் 421 பேருக்கு கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனை, திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை ஆகிய இடங்களில் இவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 288 போ் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனா்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!