தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறும் எனவும் அதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, தேர்தல் வேட்பாளர் மனு தாக்கல் செய்வது என அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது .மேலும் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தனித்தொகுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு 4 கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. ஆசிரியைகளுக்கு முதல்கட்ட பயிற்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தனித்துணை ஆட்சியர் தேர்த…

You must be logged in to post a comment.