திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நகர பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில் நகர செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஷரீப், நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் முல்லை மன்னன், பச்சையப்பன், சீனு, முன்னாள் கவுன்சிலர் முருகமணி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!