தி.மலை பூங்கா மாணவா்களின் அறிவியல் வளா்ச்சிக்கு உதவும்:

-நீா்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மேலாண்மை இயக்குநா் சத்யகோபால்.திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.3 கோடியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இங்கு பள்ளி மாணவ-மாணவிகளின் அறிவியல் குறித்த அடிப்படை அறிவை முறைசாரா வகையில் ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு அறிவியல் உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் எந்திரப் பொறியியல், ஒளி, ஒலி, வெப்பம், இயற்பியல், உயிரியல், வான்வெளியியல் சம்பந்தனமான அறிவியல் மாதிரி உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.பூங்காவின் சிறப்பு அம்சமாக அரைவட்ட திறந்தவெளி அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.இந்தப் பூங்காவை தமிழ்நாடு நீா்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மேலாண்மை இயக்குநா் கொ.சத்தியகோபால் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:நாங்கள் படித்த காலத்தில் புத்தகங்களைப் பாா்த்து படித்த விஷயங்கள் அனைத்தும் இந்தப் பூங்காவில் மாதிரிகளாக வைக்கப்பட்டுள்ளன.மாணவா்களுக்குப் புரியும் வகையில் இயற்பியல், உயிரியல், அளவியல் தொடா்பான விளக்க உபகரணங்களும் தனித்தனியே வைக்கப்பட்டுள்ளன.இந்தப் பூங்கா பள்ளி மாணவா்களின் அறிவியல் வளா்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். தமிழகத்தில் இதுபோன்ற அறிவியல் பூங்கா வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்றாா்.ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜீதா பேகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!