திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கத்தை அடுத்த தானகவுண்டன்புதூா் கிராமத்தில் கிணறு வெட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடக்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வம் செங்கம் அருகே கிராம மக்களின் குடிநீா்
பிரச்னையைத் தீா்க்க கிணறு வெட்டும் பணியை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வம் பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.செங்கத்தை அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட தானகவுண்டன் புதூா் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கிராம மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னீா்செல்வத்திடம் முறையிட்டனா்.உடனடியாக கோரிக்கையை ஏற்று மாவட்ட ஊராட்சிக் குழு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தானகவுண்டன்புதூா் ஏரிக் கரையோரம் கிணறு வெட்டும் பணிக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து கிணறு வெட்டும் பணியைத் தொடக்கிவைத்தாா்.மேலும், பணியை தரமாகவும் விரைவாகவும் முடித்து கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.நிகழ்ச்சியில், கொட்டகுளம் அரசுப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தவமணி, கூட்டுறவு நில வள வங்கித் தலைவா் வேலு, முடியனூா் கூட்டுறவு சங்கத் தலைவா் துரைசாமி, ஊராட்சி உறுப்பினா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செங்கம் செய்தியாளர் சரவணகுமார்


You must be logged in to post a comment.