இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்த முயன்ற தங்கம் பறிமுதல் : 3 பேர் கைது
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கட்டதி வரப்பட்ட 11கிலோ 300 கிராம் தங்கத்தினை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து
இலங்கையை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தமிழகம் அருகே இலங்கை இருப்பதால் கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள், பீடியிலைகள், பலசரக்கு பொருட்கள் கடத்தல் அதிகமாக நடந்து வருகிறது. கடத்தல் குறித்து இந்திய, இலங்கை கப்பற்படையினர் தொடர்ந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினருக்கு தமிழகத்திற்கு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புத்தளம் மாவட்டம் கல்பிட்டியிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக கடத்தவிருந்த 11கிலோ 300 கிராம் தங்கத்தினை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கல்பிட்டியை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தினை இலங்கை சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்தியாவில் ரூ.10 கோடி என்றும், இலங்கையில் ரூ20 கோடி மதிப்பு என தெரிவித்துள்ளனர்.



Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









