இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ., ஆர்ப்பாட்டம்..வீடியோ & புகைப்பட தொகுப்பு..

சுட்டுக் கொல்லப்பட்ட காந்தியை மீண்டும் சுட்டுக் கொல்வது சித்தரிப்பு சம்பவத்தை கண்டித்து எஸ்டிபிஐ., சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இராமநாதபுரம் மாவட்டம எஸ்டிபிஐ., கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை வைத்தார். காந்தியை சுட்டுக் கொலை செய்வது போல் சித்தரித்த இந்து மகாசபை தீவிர செயலை கண்டித்து, இந்து மகா சபை தேசிய பொதுச்செயலாளர் பூஜா சகானை கைது செய்யக் கோரியும், தேசத்தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் அமைப்புகளை தடை செய்யக் கோரி கோஷம் எழுப்பப்பட்டது. கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்வஹாப் வரவேற்றார். கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தொழிலாளர் அணிமாவட்ட நிர்வாகிகள், மகளிரணி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ் மாநிலச் செயலாளர் அஹமது நவவி, கிழக்கு மாவட்ட பொது செயலாளர் செய்யது இப்ராஹிம், மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முகமது இஸாக், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது சுலைமான் ஆகியோர் பேசினர் . கிழக்கு மாவட்ட செயலாளர் வண்ணை அஸ்கர், ராமநாதபுரம் நகர் தலைவர் அஜ்மீர் ஷரீப், நகர் செயலாளர் ஜகுபர் சாதிக் உள்பட பலர் பங்கேற்றனர். உருவ பொம்மை எரிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

செய்தி:- முருகன் , இராமநாதபுரம்

ஆசிரியர்

[email protected]

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!