பெரியபட்டிணம் ஊராட்சியில் SDPI கட்சி போராட்டம்..

பெரியபட்டணம் ஊராட்சிக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிய குழு (5000கவுன்சிலர்) வார்டுகளை பல பிரிவுகளாக பிரித்ததை கண்டித்தும், பெரியபட்டினம் ஊராட்சி மற்றும் முத்துப்பேட்டை ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளையும் இணைத்து இரண்டு ஊராட்சி ஒன்றிய குழுவாக அமைக்க அரசை வழியுறித்தி இன்று எஸ்டிபிஐ(SDPI) கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்த ஆர்ப்பாட்டம் பெரியபட்டினம் SDPI நகர் தலைவர் சா.புரோஸ் கான் தலைமையில் நடைபெற்றது. மாநிலபேச்சாளர் அப்துல்ஜமீல், கீழை.ஜஹாங்கீர் அரூஸி மற்றும் SDTU மாநிலபொருளாளர் கார்மேகம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஒசாமா அஸ்கர்அலி கண்டன கோஷத்தை எழுப்பினார். இறுதியாக நன்றியுரை நகர் துணை தலைவர் முகம்மது மீராசா வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!