கீழக்கரையில் SDPI கட்சி குடைபிடித்து அறவழி முழக்கப் போராட்டம்..

மத்திய மாநில அரசுகள் கொரனாகாலத்திலும் மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் மக்களை ஏமாற்றக் கூடிய மத அரசியல் நடத்தக்கூடிய செயல்பாடுகளை கண்டித்து கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சி சார்பாக குடைபிடித்து அறவழி முழக்கப் போராட்டம் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீத் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் நூருல் ஜமான் நகர செயலாளர் பகுர்தீன் இணைச்செயலாளர் தாஜுல் அமீன் அய்யூப் பொருளாளர் சகுபர் சாதிக் மேற்கு கிளைத் தலைவர் அசார் கிழக்கு கிளை செயலாளர் சுலைமான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம் மற்றும் எஸ்டிபிஐ உறுப்பினர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!