கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக “குடும்பமாய் இணைவோம்” நிகழ்ச்சி..

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட குடும்பமாய் இணைவோம் என்ற நிகழ்ச்சி நகர தலைவர் ஹமீது பைசல் தலைமையில் நடைபெற்றது

இதில் துணைத் தலைவர் மூர் டிராவல்ஸ் உரிமையாளர்கள் ஜெயினுதீன் மற்றும் ஹாஜா அலாவுதீன், உமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி ஜெமிலுன் நிசா, செயலாளர் செய்யது ஜாபிரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தாஜுல் அமீன் வரவேற்புரையாற்றினார் செயலாளர் பகுருதீன் தொகுத்து வழங்கினார். நன்றியுரை நடுத்தெரு கிளை தலைவர் முஹம்மது ஜலீல் வழங்கினர்.

தலைமை உரையை நகர் தலைவர் ஹமீது பைசல் வழங்கியதை தொடர்ந்து,   வாழ்த்துரையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர் தலைவர் அஹமது நதீர் வழங்கினார். மேலும் சிறப்புரையை  உமன்ஸ் இந்தியா மூமன்ட் நகர செயற்குழு உறுப்பினர் பஹ்மிதா மற்றும்  எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் வழங்கினர். இதில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி குடும்பமாக எஸ்டிபிஐ கட்சியில் மக்கள் இணைந்தார்கள்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!