புதுமடம் பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அருள் ஒளி நகரில் அமைந்துள்ள பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளி தலைமை ஆசிரியர் A.சரண்யா தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் நிர்வாக இயக்குனர் N.காதர் மைதீன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர். மாணவ மாணவியர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டு நிறைவாக பள்ளி ஆசிரியை J.கவிஷ்னா நன்றி உரை ஆற்றினார்..

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!