புதுமடம் பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட  அருள் ஒளி நகரில் அமைந்துள்ள பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.. பள்ளியின் நிறுவனர் ஹாஜி நாகூர் இப்ராஹிம் ஆலிம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அ.சரண்யா  வரவேற்புரை வழங்கி சிறப்பித்தார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் காதர் மைதீன் அழைக்க சிறப்பு விருந்தினர் மண்டபம் வட்டாரா சுகாதார  மேற்பார்வையாளர் மற்றும் பள்ளியின் கௌரவ ஆலோசகரும் ஆன மரியாதைக்குரிய மகேந்திரன் தேசிய கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகள்  வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியை தனுஷா தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் நேர்த்தியாக செய்திருந்தனர். மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு நிறைவாக  ஆசிரியை கவிஷ்னா  நன்றி உரை ஆற்றினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!