வீராணம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா…

நெல்லை மாவட்டம் வீராணம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளியின் தலைவர் முஸ்தபா கமால் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலர் குருசாமி, சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி, வீ.கே.புதூர் உதவி காவல் ஆய்வாளர் சுந்தரம், ஜமாத் தலைவர் காஜா மைதீன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ராசு, வீராணம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் சிந்தா மதார் அனைவரையும் வரவேற்று பேசினார்.  தலைமை ஆசிரியர் பால சுந்தரம் தொகுப்புரை ஆற்றினார். விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் காவல்துறையினர், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள்,பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள், என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். பள்ளியில் மாணவ மாணவிகளின் கல்வி,கலை, கலாச்சாரம் என பல போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு இனிதே விழா நிறைவுற்றது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!