எத்தனையோ இயக்கம்.. மரங்களை காக்க ஒரு இயக்கம்.. “தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம்”…

தமிழகத்தில் எத்தனையோ இயக்கம் மக்களின் நலன் கருதி இயங்கி வருகிறது, இந்நிலையில் நம் நாட்டில் உள்ள மரங்களின் நலன் காக்க போராடி வரும் இயக்கம்தான் “தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம்”.  இந்த இயக்கம் திருநெல்வேலி மாவட்டம் கீழத்தெரு, களக்காடு பகுதியை மையமாக கொண்டு இயங்கி வருகிறது.

சமீபத்தில் இந்த இயக்கம் சார்பாக திருநெல்வேலி கோட்டப்பொறியாளருக்கு பல கோரிக்கைகள் மூலம் அப்பகுதியில் உள்ள மரங்களில் பதிக்கப்படும் ஆணி மற்றும் விளம்பர போர்டுகளை நீக்க உத்தரவு வாங்கியுள்ளார்கள்.

இவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது, இது போல் நம் பகுதிகளில் உள்ள மரங்களை பாதுகாக்க முயற்சி எடுக்கும் பட்சத்தில் இயற்கையை பாதுகாக்கலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!