சாத்தான்குளம் கிராமத்தில் தென்னை நார் தொழில்துறை கருத்தரங்கம்!

இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான் குளம் கிராமத்தில தென்னை நார் தொழில்துறையின் நிலையான வளர்ச்சிக்கான மேம்பட்ட தொழில் நுட்பங்கள் தேசிய கயிறு வாரிய தலைவர் குப்புராமு கருத்தரங்கில் கலந்து கொண்டு தெரியவிக்கையில் கயிறு வாரியம் மூலம் இப்பகுதி பெண்கள் 100க்கு மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் தொழில் முனைவோர் ஆக உருவாகி உள்ளனர். நமது நாட்டில் 14 மாநிலங்களில் கயிறு உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. வருடத்திற்கு 14 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்துள்ளோம். இதன் மூலம் கயிறு உற்பத்தி நம் நாட்டினுடைய தேவை மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளுக்கு பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. மேலும் நம் நாட்டினுடைய வளர்ச்சி மேன்மைப்படும் என்றும் தெரிவித்தார். கருத்தரங்கில் சாத்தான்குளம் ஊர் பொதுமக்கள் ஜமாத்தார்கள் மற்றும் தொழில் முனைவோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!