விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, ஆடி அமாவாசையன்று பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த, தடைவிதிக்கப்பட்டுள்ளது.சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயர சதுரகிரி மலையில் உள்ள, சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஆடி அமாவாசை விழா, வரும் 31 ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் 27ஆம் தேதிமுதல், ஆகஸ்ட் 1 ஆம் தேதிவரை, 6 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம், அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில், போதிய தண்ணீர் இல்லாததால், மலைப்பகுதியில் முடிகாணிக்கைக்கு தடை விதிக்கப்படுவதாகவும், அடிவாரப் பகுதியிலேயே, முடி காணிக்கை செலுத்திவிட்டு கோயிலுக்கு வருமாறு, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









