கோவில்பட்டி ஜோதி நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்தவர் தங்கச்சாமி.இவரது மகன் அசோக்மாறன். இவர் தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களான குச்சி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜி. இருவரும் நேற்று மாலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
மீண்டும் இரவில் தம்பதியினர் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் பீரோவில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்துள்ளது.மேலும், பீரோவில் இருந்த தங்கவளையல்கள், நெக்லஸ் உள்பட 6.5 பவுன் தங்கநகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். நேற்று முன்தினம் மேற்கு பார்க் சாலையில் லோடு ஆட்டோ டிரைவர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து, 50 பவுன் தங்கநகை மற்றும் 30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போதும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதால் பொதுமக்களிடை கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. போலீசார் விரைந்து குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி: அஹமது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











