வேலூர் பேர்ர்ணாம்பட்டில் தொழில் அதிபர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் 3 லட்சம் கொள்ளை…

வேலூர்:பேர்ணாம்பட் சின்ன மஸ்ஜித் வீதியை சேர்ந்தவர் முகமது ராசா இவர் தோல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று பெங்களூரு உள்ள அவரது உறவினர் வீட்டிக்கு சென்று இன்று மாலை வீட்டிற்க்கு திரும்பி உள்ளார்.

முகமது ராசா வீட்டின் கதவு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடையந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ள சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே இருக்கும் மூன்று அறையின் கதவுகள் உடைக்கபட்டு பிரோவில் வைத்து இருந்த 20 சவரன் தங்க நகைகளும் 3 லட்சம் ரொக்கப்பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று உள்ளனர்

இச்சம்பவம் குறித்து முகமது ராசா பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் (பூதக்கண்ணாடி மாத இதழ்) கீழை நியூஸ்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!